கோடை காலம்

Photo: +Arun Tamilan 

வணக்கம் நண்பர்களே!
உங்களை இந்த வலைப் பதிவினூடாக சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தப் படம் என்மனதில் உருவாக்கிய உணர்வலைகளை நான் இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

கோடை காலம் எப்போதுமே மனதிற்கு மிகவும் இனிமையானது.மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவது ஒரு வித இன்பம் என்றால் அப்படிப் பட்ட மரங்களுடன் சேர்ந்த சோலைகளில் நம் சிறார்கள் துள்ளிக் குதித்து மகிழ்ந்து விளையாடுவதைப் பார்ப்பது இன்னொரு வித இன்பம்!
          இப்படியான இன்பங்களையெல்லாம் பெற நாம் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.நமது சிறார்களை உடலால் மட்டும் அல்ல, உள்ளத்தினாலும் ஆரோக்கியமானவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.ஒரு ஆரோக்கியமான மனிதன், ஆரோக்கியமான ஒரு நல்ல குடும்பத்தையும், ஆரோக்கியமான பல குடும்பங்கள், நல்ல ஒரு சமுதாயத்தினையும், அப்படிப் பட்ட நல்ல பல சமுதாயங்களின் சேர்க்கை,  நல்ல ஒரு உலகத்தின் தோற்றத்திற்கும் வழிவகுக்கின்றது.

- By Anjana


No comments: