நீரைப் பருக வேண்டும்

Photo: +Arun Tamilan 

படத்திலே உச்சி வெயில் மண்டையைப் பிளக்கின்றது.இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து மீள நாம் அதிகளவு நீரைப் பருக வேண்டும்.ஒரு சராசரி மனிதன் ஒருநாளைக்கு குறைந்தது 2 லீட்டர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும்.நமது சிறார்களின் உணவிலே பழங்களும் காய்கறிகளும் அதிகளவு சேர வேண்டும்! இனிப்புப் பண்டங்கள் அவர்களது உணவிலே நன்கு குறைக்கப் பட்டு அவர்களின் ஆர்வம் விளையாட்டிலும் உடல்ப் பயிட்சியிலும் தீவிரமாக்கப் படவேண்டும்.சிறார்கள் சரியான  உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியத்தைப் பெற்று விட்டால் அவர்கள் இத்தகைய விளையாட்டு இடங்களிலே ஓடி ஆடி விளையாடுவதே அவர்களுக்கு சிறந்த ஒரு உடல் பயிற்ச்சி தானே !
  நல்ல உணவுப் பழக்கம்,சுத்தம் சுகாதாரத்துடன் சேர்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உடல்ப்பயிட்சி,நல்ல புத்தகங்களை நோக்கிய வாசிப்புப் பழக்கம் போன்றவற்றை நாம் நமது சிறார்களுக்கு கற்றுத்தர வேண்டும்.அவர்கள் மனதிலே மகிழ்ச்சி பொங்கவேண்டும்!படத்திலே இந்தச் சிறுவன் வைத்திருக்கும் பல்லூன்களைப் போல நமது மனங்கள் யாவும் விரிந்து பரந்ததாகட்டும்!அற்புதமான சிந்தனைகள் நம்மவர்களிடையே உதிக்கட்டும்! இந்த உலகினை எல்லாவிதத்திலும்  நாம் ஒளியூட்டுவோம்!

- By Anjana

No comments: